ஞாயிறு, மார்ச் 23, 2014

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: பாகிஸ்தான் 191 ரன் குவிப்பு

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. மிர்புரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் பிரிவு–2 ல் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்லி பவுலிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணியில் ஜுனைடு கானுக்குப்பதில், பாபர் வாய்ப்பு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் அதிர்ச்சி தந்தார். போலிஞ்சர் வேகத்தில் இவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். வாட்சன் வேகத்தில் கேப்டன் ஹபீஸ் (13) வெளியேறினார். இதன் பின் இணைந்த உமர் அக்மல், கம்ரான் அக்மல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

உமர் அக்மல் அரை சதம் கடந்தார். கம்ரான் அக்மல் 31 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக விளையாடிய உமர் அக்மல் 94 ரன்னில் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் குவித்தது.

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக