ஞாயிறு, மார்ச் 30, 2014

எஸ்.டி.பி.ஐ வடசென்னை வேட்பாளர் நிஜாம் முஹைதீன் வேட்புமனு தாக்கல்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று (29/03/2014) எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை வேட்பாளர் நிஜாம் முகைதீன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர்கள் நாஞ்சில் செய்யதலி, அமீர் ஹம்சா, ரத்தினம், மாவட்ட பொது செயலாளர் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நேற்று காலை 11:30 மணி அளவில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தொண்டர்களுடன் பேரணியாக வந்த அவர், சென்னை தங்கசாலை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர் நிஜாம் முகைதீனுடன் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, தேர்தல் பணிக்குழுத் தலைவர் அமீர் ஹம்சா, வடசென்னை மாவட்டத் தலைவர் முகம்மது ரஷீத் மற்றும் வழக்கறிஞர் ராஜா முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக