செவ்வாய், ஜனவரி 31, 2012

சட்டசபை தேர்லில் உத்தரகண்டில் 70%, பஞ்சாபில் 77% வாக்குப்பதிவு . .

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்லில் 77 சதவீத வாக்குகள் பதிவாயின. அதேபோல், உத்தரகண்டில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா

பாகிஸ்தான் அடுத்த பிரதமர் நானே – இம்ரான்கான் !

பாகிஸ்தானில் அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் எனது கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும். பாகிஸ்தானின் புதிய பிரதமராக நான் தேர்வுச் செய்யப்படுவேன்’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்.கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான்கான் கூறியுள்ளார்.

பிரபாஹர் பட்டின் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

பந்தவால்: இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசிய பா.ஜ.க தலைவர் கல்லடக்கா பிரபாஹர் பட்டினை வன்மையாக கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே தெரிவித்துள்ளார்.கடந்த 30ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் உப்பினங்காடியில் ஹிந்து சமஜோத்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் பிரபாஹர் முஸ்லிம்களுக்கு

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாரிக்கும் ஆள் இல்லாத விமானம் !

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாரிக்கும் ஆள் இல்லாத விமானம்அமெரிக்காவுக்கும், ஈரானுக்கம் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை அனுப்பி உளவு பார்த்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா இதே போல அனுப்பிய விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இப்போது ஈரான் ஆள் இல்லாத விமானத்தை விரைவில் தயாரிக்க போவதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி அகமது வாஜி

ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் பெட்ரோல்: ராஞ்சி நிர்வாகம் அதிரடி !

Petrol Bunk
 ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று ராஞ்சி மாவட்ட நிர்வாகம் அங்குள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் சமீப காலமாக ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், இருசக்கர வாகனத்தில்

ஈரானுக்கு பொருளாதார தடை விதித்திருப்பது அநியாயம் : அதிபர் ராஜபக்ச !

கொழும்பு: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பாதிக்கப்படுவதாக ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணைய் வளத்தில் ஈரானை மட்டுமே இலங்கை சார்ந்திருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை

ரூ.50,000 கோடிக்கு 'டஸ்ஸால்ட் ரபேல்' போர் விமானங்களை வாங்கும் இந்தியா !

Dassault Rafaleடெல்லி: பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின்

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: வளைகுடா நாடுகளுக்கு கொரியாவை தூதுவிட்ட யுஎஸ் !

Crude Oilசியோல்: ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண, தனது 'கைப்புள்ள'யான தென் கொரியாவை தூதனுப்புகிறது அமெரிக்கா. உலகிலேயே அதிக எண்ணெய் குடிக்கும் நாடு அமெரிக்காதான். ஏகப்பட்ட கச்சா எண்ணெயை இருப்பில் வைத்திருக்கும் நாடும் அதுவே.

கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொலை வெறி தாக்குதல் !

 திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னனி பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுடன் மத்திய அரசு அமைத்த குழு இன்று

வரும் 2110ல் ஜப்பானின் மக்கள் தொகை வெறும் 4 கோடிதான், ஆய்வில் தகவல் !

ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2060ல், ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில்

ருஷ்டியின் நாவல் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது – கட்ஜு

கட்ஜுபுதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற நாவல் மூலம் இஸ்லாம் மற்றும் நபிகளார் மீது தாக்குதல் நடத்தினார் என்றும், இது முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது என்றும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற

நரோடா பாட்டியா : முஸ்லிம்களை கொன்று குவித்த இடத்தை நீதிபதி பார்வையிட்டார்

imagesCANUNBC2அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என்ற நிலையில் நரோடா பாட்டியாவில் முஸ்லிம்களை இனப் படுகொலைச் செய்த பகுதிகளை இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டார். 2002-ஆம் ஆண்டு முஸ்லிம்களை மோடி தலைமையிலான சங்க்பரிவார பயங்கரவாதி கொன்று

பா.ஜ.க ஹெச். ராஜா மீது அழுகிய முட்டை வீச்சு !

இதுநாள் வரை வட மாநிலங்களில் இருந்த தலைவர்கள் மீதான தாக்குதல் கலாச்சாரம் மெல்ல தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது. மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கூட்டத்தின் போது, ஹெச். ராஜா மீது மர்மநபர்கள் அழுகிய முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மூட்டை வீசியவர்கள்

தினம் ஒரு 'கப்' தக்காளி சூப் – கிடைக்குமே சூப்பர் எபெக்ட் !

 ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும்

இன்னும் 45 வருடத்துக்கு தமிழகத்தில் காங். ஆட்சிக்கு வர முடியாது : அய்யர் !

Mani Shankar Aiyar
 டெல்லி: தமிழத்தில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இது நீடித்தால் இன்னும் 45 வருடங்களுக்கு தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த சோனியா காந்தி குறித்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பின் வெளியீடு நடந்தது. இதில் கலந்து கொண்டு

திங்கள், ஜனவரி 30, 2012

இஸ்லாத்திற்கு எதிரான யூத ஊடகங்கள் !

 நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) 
அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46)

ஐரோப்பிய யூனியன் மீது நாங்கள் தடை விதிப்போம் : ஈரான் அதிரடி அறிவிப்பு !

ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியன்

முஸ்லிம்கள் இட ஒதுகீடு கவர்னர் உரையில் இடம்பெறவில்லை வருத்தமளிக்கிறது : ஜாவாஹிருல்லா

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்  சேதமடைந்த குடிசைகளுக்குப் பதில் ஒரு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் ரூ. 1000  கோடியில் செயல்படுத்தப்பட
எனினும், தமிழக அரசால் ஏற்கெனவே எசயல்படுத்தப்படும் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.1.80 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் கட்டப்படும்

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது :பிரணாப் முகர்ஜி !

ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித்தார். ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை

ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறதா? அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 2 நாள் ஆய்வு

 ஈரான் அணு உலைகளை ஆய்வு செய்ய, சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 6 பேர் வந்துள்ளனர்.
அணுஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தின. ஆனால், ஆயுதங்கள் தயாரிக்கவில்லை. அணுசக்தி திட்டங்களைதான்

பெண் போலீசை அறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி !

பெண் போலீசை அறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிபெங்களூரில் உள்ளூர் பிரபலங்கள் பங்கேற்றிருந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க ஞாயிறு கிழமை அன்று ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது மகளுடன் சேர்ந்து வந்தார்.ஆனால் அவர் ஒரே அனுமதிகூப்பன் மட்டும் வைத்திருந்தார் அப்போது பணியிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சுமலா டி நாயக் அவரை அனுமதிக்காமல் தடுக்க

கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்: ஆளுநர் உரை !

Rosaiahசென்னை: முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அதேபோல தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழந்த கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு மீட்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையின்போது

முஸ்லிம்களுக்கு எதிராக எழுத மாட்டேன் : கோர்டில் எழுதி கொடுத்த சாமி

  இஸ்லாமியர்கள் குறித்து துவேஷத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய வழக்கில், இனிமேல் அதுபோல எழுத மாட்டேன் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்ததால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை

ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் !

Godse Family
 நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி   நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில் ஆர் ஸ் ஸ்  பயங்கரவாதி   நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை

BJP இரண்டாக உடைகிறது !

பராதிய ஜனதா கட்சியில் மோடிக்கும் அத்வானிக்கும் இடையே கடும் குடும்பி சண்டை நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி தன்னை பெரும் செல்வாக்கு உள்ள தலைவராக காட்டி  வந்துள்ளார்.பாபர் மசூதி விஷயத்தை பூதாகரமாக்கி அதை வைத்து  தொடர்ந்து பல ரதயாத்திரைகளை (ரெத்த யாத்திரை) நடத்தி மதவாத பிரிவினைகளை உண்டாக்கி பாரதிய ஜனதாவில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி

சங்க்பரிவாருக்கு விசுவாசமான அரசு அதிகாரிகள் முஸ்லிம்களின் உரிமைகளை தடுக்கிறார்கள் – ராகுல் காந்தி

புதுடெல்லி:அரசு பணிகளில் ஊருடுவியுள்ள சங்க்பரிவார்கள் மீது விசுவாசமுள்ள அதிகாரிகள்தாம் இந்தியாவில் முஸ்லிம்களின் மோசமான நிலைக்கு காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அரசாங்கத்திலும், அரசு அதிகாரிகளின் கூட்டத்திலும் ஊடுருவியுள்ள சங்க்பரிவாருக்கு விசுவாசமான சிலர் முஸ்லிம்களுக்கு எதிராக

அமீர்கான்:சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை !

Amir after his release from Rohtak jailபுதுடெல்லி:எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து

ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் எடியூரப்பா !

விஜயநகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் மாநாட்டின் நேற்றைய நிறைவு நாள் நிகழ்ச்சியில், சுரங்க ஊழலில் சிக்கி பதவியிழந்த  கர்நாடகா முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா கலந்து கொண்டார்.
ஊப்ளியிலுள்ள விஜயநகரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இந்து சக்தி சங்கம மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்றோடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் தொடக்கநாள் விழா அன்று கர்நாடகா முதல் அமைச்சர் சதானந்தகவுடா உள்ளிட்ட பாஜக

வடகொரியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை !

 வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில்

இலங்கை தயாரிப்புகளை தமிழகத்தில் விற்க தடை !

சென்னை: இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன்