ஞாயிறு, ஜனவரி 29, 2012

த.மு.மு.க-ம.ம.க தலைவராக மெளலவி ஜே.எஸ்.ரிஃபாயி தேர்வு !

ஜே.எஸ்.ரிஃபாயிசென்னை:தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக மெளலவி ஜே.எஸ்.ரிஃபாயி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் சென்னை தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் வைத்து நடைபெற்றன. இக்கூட்டத்தில்
மாநில நிர்வாகிகளின் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் குறித்து த.மு.மு.கவின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக் குழுவில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிஃபாயி, பொருளாளராக ஒ.யு.ரஹ்மத்துல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளராக பி.அப்துல் ஸமது, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்ஸாரி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக நானும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக