திங்கள், அக்டோபர் 12, 2015

தீவிரமடையும் போராட்டம்: அமன் சேதி உட்பட மேலும் 6 எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்கின்றனர்

கருத்து சுதந்திர அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இந்திய எழுத்தாளர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், தற்போது, அமன் சேதி உட்பட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் 6 பேர் தங்களின்  சாகித்ய அகாடமி விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளனர். 

சனி, செப்டம்பர் 26, 2015

மெக்கா புனித பயண நெரிசலில் சிக்கி பலியான 14 இந்தியர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மெக்கா சென்ற ஹஜ் யாத்திரீகர்கள் மெக்காவில் தொழுகை நடத்திவிட்டு மினா என்ற இடத்தில் சாத்தான்மீது கல் எறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

மார்பிள் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: வசுந்தரா மீது ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் புகார்-பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமேஸ்வர்துதி, செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலே ஆகியோர் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

வியாழன், செப்டம்பர் 17, 2015

நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்பு கூடுகள் பற்றி விசாரிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு

மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் குழுவினரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இ.மலம் பட்டி மணிமுத்தாறு ஓடை சுடுகாட்டு பகுதியில் தோண்டியபோது 4 பேரின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் கிடைத்தன.

கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க.வுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது; இளங்கோவன் கண்டனம்

நவஇந்தியாவின் சிற்பிகளாக கருதப்பட்ட அன்னை இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோருடைய அஞ்சல் தலைகளை நிறுத்தி வைத்திருக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையங்களின் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார் 

வெள்ளி, செப்டம்பர் 11, 2015

மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம்: இளங்கோவன் கண்டனம்

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட்டது தமிழகத்திற்கு அவமானம் என இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’குஜராத்தில் ’’இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர்.

மலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசிய பிரதமருக்கு எதிராக போலீசின் தடையை மீறி அந்நாட்டு தலைநகரில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைப்பெற்றது. 

கர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொலை: பதட்டம்

ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கி நேற்று  காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வியாழன், ஆகஸ்ட் 27, 2015

வன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் வெளியிடப்பட்டதால் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையாகவும், சாதி கலவரமாகவும் மாறியதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சனி, ஆகஸ்ட் 22, 2015

பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு மகனின் கடிதம்

குழந்தையை பெற்று கொள்வதாலேயே ஒருவர் முழுமையாக தந்தையாக ஆகிவிட முடியாது. மாறாக தனது குழந்தைகளுக்கு அனைத்து செயல்களிலும் முன் மாதிரியாக இருந்து, அவர்களை அன்பு மிக்கவர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக உருவாக்கும் போது தான் ஒருவர் தந்தையாக தனது கடமையை முழுமையாக ஆற்றுகிறார். அதற்கு ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்ஜீவ் பட் ஒரு சிறந்த உதாரணம்.

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

முஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 25 அன்று நாடு முழுவதும் திரையிடல்!


“முஸஃபர் நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப் படம் ஆகஸ்ட் 25 அன்று நாடு முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. “எதிர்ப்பு சினிமா” (Cinema of Resistance) என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நாகுல் சிங் ஸானி இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கெதிராக சங்கப் பரிவார பயங்கரவாத சக்திகள் நடத்திய கோரமான இனப்படுகொலையைத் தோலுரித்துக்காட்டுகிறது. நாட்டையே அழிக்கத் துடிக்கும் ஃபாசிச வகுப்புவாதத்திற்கெதிராக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து பல ஆவணப் படங்களை இயக்கியவர் சுப்ரதீப் சக்கரவர்த்தி.

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

ஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொடியேற்றிய தொண்டர்கள் கைது

நாடு முழுவதும் கடந்த 15–ந்தேதி சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி பொதுமக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது

இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

என்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை! மத்திய அரசு தலையிட எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது: ராகுல் காந்தி

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மையத்தின் தலைவராக, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கஜேந்திர சவுகானை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நியமனம் செய்ததற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

ம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம்

மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் கல்வி மற்றும் அரசுப் பணி தேர்வு வாரியத்தில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இதுபற்றி மாநில போலீசாரின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது கடைநிலை ஊழியரில் தொடங்கி கவர்னர் வரை இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சனி, ஆகஸ்ட் 08, 2015

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்துகிறது

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கு புதிய பெயர் வைத்து பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் மாநாடு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

மாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக கொண்டுச் செல்லப்படும் மாடுகளை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தி, மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைகளில் ஒப்படைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், ஆகஸ்ட் 03, 2015

கலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

’’மதுஒழிப்பிற்கு எதிரான காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உயிர் தியாகத்துக்கு பிறகு இன்றைக்கு மதுவிலக்கு கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான மலேசிய விமானத்துக்கு உரியதா என ஆய்வு?

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 (போயிங் 777 ரகம்), கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றபோது நடுவானில் மாயமானது.

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தியது.

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செய்ய தயார்: ஸ்டாலின் பேச்சு

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெருமாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.

இந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூறுகிறார் ராஜ்நாத்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே ’இந்து பயங்கரவாதம்' தொடர்பான மோதல் அதிகரித்து வருகிறது. ராஜ்நாத் சிங் ’இந்து பயங்கரவாதம்' என்பதன் அர்த்தத்தை மாற்றிக் கூறுகிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சனி, ஜூன் 27, 2015

விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்மச்சாவு: ஆம்பூரில் பதட்டம் நீடிப்பு


வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ஜமில் அகமது(வயது25). இவர் கடந்த 19–ந்தேதி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூ அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஹாக்கி உலக லீக் அரையிறுதி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது

ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டி பெல்ஜியத்தில் உள்ள அந்த்வெர்ப் நகரில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி  பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்து. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.

கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

தாங்கள் மேற்கொண்ட சோதனையில் கே.எப்.சி. உணவுகளில் கேடுவிளைவிக்கும் பாக்டீரியா இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவை சேர்ந்த அரசு சாரா நிறுவனம்.

செவ்வாய், ஜூன் 23, 2015

கத்தி முனையில் தாயை மடக்கி நகைகளை கொள்ளயடிக்கவந்த கும்பலை திணறடித்த 7 வயது சிறுவனுக்கு வீரதீர விருது

மத்திய இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்ற ஏழு வயது சிறுவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவு நேரத்தில் முன்வாசல் கதவு உடைத்து திறக்கப்படும் ஓசை கேட்டு, கீழே இறங்கி வந்தவன், அந்த காட்சியை கண்டு திடுக்கிட்டான். 

திங்கள், ஜூன் 22, 2015

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

சனி, ஜூன் 20, 2015

கடற்கொள்ளையர்கள் கடத்திய மலேசிய எண்ணெய் கப்பல் மீட்பு: கடற்படை அதிரடி நடவடிக்கை

மலேசிய கடற்படை சுற்றி வளைத்ததால் தாங்கள் கடத்திய எண்ணெய் கப்பலை விடுவித்துவிட்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.

மலேசிய அரசுக்கு சொந்தமான ‘ஓர்கிம் ஹார்மனி’ என்ற கப்பல் கடந்த 11-ந்தேதி மலேசியாவின் தான்ஜூங் சேதிலி துறைமுகத்தில் இருந்து 50 ஆயிரம் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

வியாழன், ஜூன் 18, 2015

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்-செர்பியா

20-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. முதலாவது அரை இறுதியில் பிரேசில்-செனகல் அணிகள் மோதின.

துருக்கி முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல் மரணம்

துருக்கி நாட்டின் முன்னாள் அதிபர் சுலேமான் டெமிரெல்(90)  மரணம் அடைந்தார்.

தனது 40-வது வயதில் அரசியலுக்குள் நுழைந்த இவர் துருக்கி நீதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதன், ஜூன் 10, 2015

வியாழன், ஜூன் 04, 2015

இஸ்லாமிய பெண் பயணியிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க விமான நிறுவனம்

இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின் போது மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வரும் இஸ்லாமிய பெண் தஹேரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார்.

ஓ.பி.எஸ். தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் !

பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்துவந்தார் தாழ்த்தப் பட்ட இளைஞர் நாகமுத்து. 

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, இந்த கோவிலை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  அப்போது நாகமுத்துவை இனிமேல் கோவிலுக்கு வரக்கூடாது என்றும்,   சாதி பெயரைச்சொல்லி திட்டியும்   மிரட்டியும் வந்தனர்.

மசூதி குறித்து சர்ச்சை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு கைது வாரண்ட்


subbramaniyan sami














கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணியசாமி, "'மசூதிகளை எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் அவை மத வழிபாட்டுத் தாலங்கள் இல்லை" என்று பேசியிருந்தார்.

புதன், மே 27, 2015

காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள்; ஜெ., திறந்து வைத்தார்

காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு ரூ.444 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.  இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் 3 தளங்களுடன் 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்துவைத்தார். 

ஞாயிறு, மே 24, 2015

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது: இளங்கோவன் பேட்டி

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார். 

வெளிநாட்டு இந்தியர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடி மீது சமூக ஆர்வலர் வழக்கு

பிரதமர் மோடி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்த போது சியோலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டு பேசும் போது, முன்பு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் பிறந்ததற்காக வருத்தப்பட்டனர்.

திங்கள், மே 18, 2015

முஹம்மது முர்ஸிக்கும், யூசுஃப் அல் கர்ளாவிக்கும் மரண தண்டனை!

சதிப் புரட்சியின் மூலம் நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
முஹம்மது முர்ஸி மற்றும் 105 இஃக்வானுல் முஸ்லிமீன் தலைவர்களுக்கான தண்டனை தீர்ப்பை கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் முஃப்தியிடம் ஒப்படைத்துள்ளது.

சனி, மே 16, 2015

மோடி அரசின் மோசமான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தடை செய்யப்பட்ட குழந்தை உழைப்புக்குக் கதவைத் திறப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மோடி அரசின் மோசமான நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வெள்ளி, மே 15, 2015

இந்தியாவின் வரைபடத்தை சீன தொலைக்காட்சி தவறாக வெளியிட்டதால் சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் வரைபடத்தை சீனாவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தவறாக வெளியிட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் மாநில பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன.

திங்கள், மே 11, 2015

இன்று தேர்தல் நடத்தினாலும் டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும்: கெஜ்ரிவால்

டெல்லி அரசை விமர்சித்து தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு எதிராக முதன்மை செயலாளரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். பின்னர் வழக்கு தொடர வேண்டும் என்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

நீர்மூழ்கி கப்பலில் இருந்து புறப்பட்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை தாக்கும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வடகொரியா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, மே 10, 2015

மாஸ்கோ அணிவகுப்பில் ஏவுகணை தாங்கிச் சென்ற டேங்க் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றதின் 70-ம் ஆண்டு நினைவு தின பேரணி நேற்று ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் கலந்து கொண்டு கண்கவர் பேரணியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். : நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.  பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

சனி, மே 09, 2015

ஜெயலலிதா வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு: பெங்களூருவில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பிரிட்டனில் 2வது முறையாக ஆட்சியை பிடித்தார் டேவிட் கேமரூன்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அங்கு மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, மே 03, 2015

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்! 11ல் வேல்முருகன் ஆர்ப்பாட்டம்!!


தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை:
’’சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும் 'பொன்விழா'வை நோக்கி மேற்கூரை இடிந்து விழுந்துகிறது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.