புதன், ஜூன் 10, 2015

செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 35 இடங்களிலும், ஆந்திரா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தலா 2 இடங்களிலும் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 6 வருட காலமாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணத்தால் இச்சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக செட்டிநாடு குழும சொத்துக்கள் தொடர்பாக தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கும், அவரது முன்னாள் வளர்ப்பு மகன் அய்யப்பனுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இச்சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக