திங்கள், ஜனவரி 30, 2012

பெண் போலீசை அறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி !

பெண் போலீசை அறைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிபெங்களூரில் உள்ளூர் பிரபலங்கள் பங்கேற்றிருந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க ஞாயிறு கிழமை அன்று ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது மகளுடன் சேர்ந்து வந்தார்.ஆனால் அவர் ஒரே அனுமதிகூப்பன் மட்டும் வைத்திருந்தார் அப்போது பணியிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சுமலா டி நாயக் அவரை அனுமதிக்காமல் தடுக்க முயற்சித்தார்.  
 
பின்னர் அவர்களை உள்ளே அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் சங்க உறுப்பினர்களிடம் இன்ஸ்பெக்டர் நாயக் கேட்டார். அதன் பிறகு தன் மகளுடன் மைதானத்திற்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  
 
போட்டி பார்த்த பிறகு வெளியே வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி இன்ஸ்பெக்டர் நாயக்குடன்  சண்டையிட்டு கடுமையாக தாக்கினார் என கூறப்பட்டது. இதனையடுத்து பெங்களூர் போலீஸ் உண்மையை கண்டறிய CCTV காட்சிகளை ஆராய்ந்து வருகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக