வெள்ளி, ஜனவரி 27, 2012

ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால் கச்சா எண்ணெய் 20 சதவீதம் உயரும். ஐ.எம்.எப் எச்சரிக்கை !

ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலருக்கும் (ரூ.1500) அதிகமாக உயரும் என்று ஐ.எம்.எப். வியாழக்கிழமை தெரிவித்தது. ஈரானின் அணு திட்டங்களை காரணம் காட்டி, அந்நாட்டின் மீது
பொருளாதார தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தேவையான மாற்று ஏற்பாடு இல்லாமல் அந்நாட்டின் மீது தடைவிதித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20-30 சதவீதம் உயரும் என்று ஐ.எம்.எப். கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக