வெள்ளி, ஜனவரி 27, 2012

ஊழல்வாதிகளை காங்கிரஸில் இருந்து விரட்டுவேன்: ராகுல் உறுதி !

 ஊழல்வாதிகளை காங்கிரஸ் கட்சியில் இருந்து விரட்டுவேன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
 பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், கித்தர்பாஹா தொகுதி நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த காங்கிரஸ் கட்சியினரை சந்தித்துப் பேசினேன். அப்போது உங்களுக்கு வாய்ப்பு அளித்து நீங்கள் வெற்றி பெற்றபின், ஏதாவது சிறிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால், உடனடியாக உங்களை கட்சியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று எச்சரித்துள்ளேன்.
 ஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடம் இல்லை. காங்கிரஸ் ஊழலை முழுமையாக எதிர்க்கிறது. எங்கள் கட்சிக்காரர்கள் யாராவது ஊழல் செய்தால் அவர்களது அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிடும். அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று உறுதிபடப் பேசினார் ராகுல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக