வியாழன், ஆகஸ்ட் 28, 2014

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்தது அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ்

அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தியிருந்த அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ் கட்சி இன்று பா.ஜ.க.கூட்டணியை முறித்துக்கொண்டது.
அக்கட்சி தலைவரான குல்தீப் பிஷ்னோய் இது குறித்து கூறுகையில், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஹிசார் தொகுதியில் போட்டியுடவுள்ள தன்னை தோற்கடிக்க பா.ஜ.க.வினர் சதி செய்கின்றனர். மேலும் ஒவ்வொரும் கட்டத்திலும் பா.ஜ.க என்னை அடக்கி வைக்கவே முயல்கிறது. எனவே இன்றைய தினத்தில் அக்கட்சியுடனான கூட்டணியை நாங்கள் முறித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பஜன்லாலின் இளைய மகனான பிஷ்னோய் கடந்த மூன்று வருடங்களாக பா.ஜ.க.வுடன் கூட்டணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று அதை முறியடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக