செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

கார் பார்க்கிங் செய்த போது மோதல்: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தனது காரை பார்க்கிங் செய்த போது மோதலில் ஈடுபட்டதால் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் தனது காரை நிறுத்தும் போது மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை யோகராஜ் சிங் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக