செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில அலுவலகம் திறப்பு விழாவில் பாப்புலர் ஃபரண்ட் மாநில செயலாளர் பங்கேற்பு!

எஸ்டிபிஐ கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பான எஸ்.டி.டி.யூ (SDTU- social democratic trade union) தொழிற்சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட்-25) சென்னையில் நடைபெற்றது.

சென்னை மண்ணடி இப்ராஹிம் சாகிபு தெருவில் உள்ள எஸ்.டி.டி.யூ மாநில தலைமை அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் முகம்மது பாரூக் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ்.டி.டி.யூ மாநில செயலாளர் யு.பி. அஜித் ரஹ்மான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் எஸ்.டி.டி.யூ மாநில துணை தலைவர் எஸ்.சம்சுதீன், மாநில இணை செயலாளர் பல்லாவரம் அன்சாரி, மாநில பொருளாளர் ஓ.பி. கார்மேகம் மற்றும் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முகம்மது ரஷீன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் முகம்மது ரஷீத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகம்மது நாஜிம், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சேக், தென்சென்னை மாவட்டத் தலைவர் ஜமால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியாக எஸ்.டி.டி.யூ மாநில துணைத் தலைவர் ஏ.அப்துல் கரீம் நன்றி உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க தொகுதி, கிளை நிர்வாகிகள், தொழிலாளர்கள், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக