
அமெரிக்க ராணுவத்தினரின் வேடத்தில் நேட்டோ ராணுவத் தளத்தில் நுழைந்த போராளிகள் மூன்று எரிபொருள் நிரப்பும் ஸ்டேசன்களையும், ஏராளமான வாகனங்களையும் போர் விமானங்களையும் முற்றிலும் அழித்துள்ளதாக பெண்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நள்ளிரவில் ராணுவ தளத்தில் திடீரென நுழைந்த தாலிபான் போராளிகளின் போராட்ட வீரியத்தின் முன்னால் பதறிப்போன நேட்டோ ராணுவத்தினரால் ஏற்பட்ட இழப்பையும் பெண்டகன் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் நடந்த தாக்குதலில் 20 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இழப்பு இதைவிட மிக அதிகம் என்று ஆஃப்கானிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தாலிபான் வேட்டைக்காக ஆஃப்கானிஸ்தானிற்கு வந்த இளவரசர் ஹாரி, போராளிகளின் தாக்குதலில் இருந்து சில மீட்டர்கள் இடைவெளியில் உயிர் தப்பினார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
நாட்கள் செல்லச் செல்ல ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான தாலிபானின் போராட்டம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தானாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வருவதை சிறிதும் மதிக்காத தாலிபான் போராளிகள் பெண்டகனின் அதிகாரிகளுக்கு அபாயத்தின் அறிகுறியை ஹெல்மந்த் மாகாண தாக்குதல் மூலம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக