புதன், செப்டம்பர் 26, 2012

உணவுப் பொருட்கள் விற்பனை மோசடி: ராம்தேவின் நிறுவனத்திற்கு நோட்டீஸ் !

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி யோக மையம் மற்றும் திவ்ய யோக மந்திர் டிரஸ்ட் உள்ளது. இந்த டிரஸ்ட் சார்பில் உணவுப்பொருள் மற்றும் மருந்து பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து சப்ளை செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமற்றதாக உள்ளன என்று அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் 6 உணவுப்பொருட்கள் மாதிரியை அதிகாரிகள் சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர்.
 
இதில், அந்த உணவுப்பொருட்களில் விதிமுறையை மீறி லேபிள்கள் ஒட்டியிருந்தது தெரியவந்தது. அந்த உணவுப்பொருட்கள் வேறு இடத்தில் தயாரிக்கப்பட்டவை. ஆனால் அதன் தரத்திற்கும் தூய்மைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் ராம்தேவின் பதஞ்சலி பிராண்ட் லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தன.
 
இந்த விற்பனை மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக