வெள்ளி, செப்டம்பர் 21, 2012

ராமநாதபுரத்தில் பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு : காவி பயங்கரவாதிகளின் சதியா !

ராமநாதபுரத்தில் பள்ளிவாசலில் 
பெட்ரோல் குண்டு வீச்சு:
 போலீசார் விசாரணை
 ராமநாதபுரம்- ராமேசுவரம் நெடுஞ்சாலை பாரதி நகரில் புகாரி ஆலிவ் தொழுகை பள்ளிவாசல் உள்ளது. நேற்று இரவு பள்ளிவாசலில் மோதினார் என்பவர் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு “மர்ம“ ஆசாமிகள் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டு ஜன்னலில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த சத்தம் கேட்டு மோதினார் எழுந்து ஓடிவந்து பார்த்தார். அப்போது ஜன்னல் தீப்பிடித்து எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலம் ஆனது. பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து அவர் பள்ளிவாசல் ஆலிம் அக்பருக்கு தகவல் தெரிவித்தார். 

இதற்கிடையில் பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. அவர்கள் திரண்டு சென்று பள்ளிவாசலை பார்வையிட்டனர். இது குறித்து பள்ளி வாசல் ஆலிம் அக்பர் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? என்று விசாரணை நடத்தி வருகிறார். 

பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக