வியாழன், செப்டம்பர் 20, 2012

மோடிக்கு போட்டியாக கேசுபாய் யாத்திரை !

Keshubhai Patel also to undertake yatra in poll-bound Gujaratஅஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி வருகிற சட்டப்பேரவை தேர்தலைக் குறிவைத்து நடத்தும் யாத்திரைக்கு போட்டியாக அம்மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வரான கேசுபாய் படேல் செப்டம்பர் 23-ம் தேதி முதல் தேர்தல் யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான படேல், மோடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சமீபத்தில்
கட்சியிலிருந்து விலகி, ‘குஜராத் பரிவர்த்தன கட்சி’யைத் தொடங்கினார். இந்நிலையில், ‘பரிவர்த்தன யாத்திரை’ என்ற பெயரில் ராஜ்கோட் மாவட்டம் விர்பூரிலிருந்து யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மோடி ‘சுவாமி விவேகானந்தா யுவ விகாஸ் யாத்ரா’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுபோல் காங்கிரஸ் கட்சியும் யாத்திரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக