காபூல்:ஆஃப்கானிஸ்தான் போலீஸ்காரர் ஒருவர் நான்கு நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினரை சுட்டுக் கொலைச் செய்துள்ளார். தெற்கு ஆஃப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் செக்போஸ்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பிறகு ஐந்து ஆஃப்கான் போலீசாரை காணவில்லை. ஆனால், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை நேட்டோ படையினர்
அண்மைக் காலமாக நேட்டோ ஆக்கிரமிப்பு படையினர் தாலிபான் போராளிகள் மற்றும் ஆஃப்கான் போலீசாரின் தாக்குதலில் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அதனிடையே, நேட்டோ படையினர் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் லக்மான் மாகாணத்தில் விறகு பொறுக்கச் சென்ற அப்பாவி பெண்கள் எட்டுபேர் பலியானார்கள். பலியான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்களை ஊர்மக்கள் மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாக மாகாண செய்தித் தொடர்பாளர் ஸர்வாதி ஸிவாக் கூறினார். தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நேட்டோ படையினர் தாக்குதலில் 45 போராளிகள் கொல்லப்பட்டதாக பொய்யை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக