சனி, செப்டம்பர் 29, 2012

மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் 'கரண்ட் கட் என்ன கொடுமை சார் இது !

சிவகங்கை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்ட கூட்டத்தில் 3 முறை மின்தடை ஏற்பட்டதால், அமைச்சரும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் கரு.முருகானந்தம் தலைமையில் சிவகங்கையில் நாடளுமன்ற தொகுதி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது., நிர்வாகிகள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். இதனால் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்த போது, 2 முறையும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசிய
போது, ஒரு முறையும் மின்தடை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நிர்வாகிகள், நம்ம கூட்டத்திலேயே மின்தடையா என்று அதிர்ச்சி அடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக