திங்கள், செப்டம்பர் 24, 2012

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நோக்கி செருப்பை காட்டிய ஆசாமியால் பரபரப்பு !

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நோக்கி, செருப்பைக் காட்டிய ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலம், மதுபானியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றுபேசினார். அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவர், நிதிஷ்குமாரை நோக்கி செருப்பைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதை, தொலைக்காட்சி சேனல் ஒன்று, படம் பிடித்து
ஒளிபரப்பியது.இதனால், பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மறுத்துள்ளார். தொலைக்காட்சி சேனலில், வெளியான செய்தி தவறானது என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக