
இதுபோன்ற முடிவுகளை எடுக்கும், மன்மோகன் சிங்கின் சேவை, எங்களுக்கு தேவை இல்லை. அவர், ஏற்கனவே பணியாற்றிய உலக வங்கிக்கு சென்று, தன் சேவையை தொடரட்டும். திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், உலக வங்கிக்கு செல்லட்டும்.
பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரம், திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக, மக்களை பசியில் வாட விட்டு விடுவர். டீசல் விலை உயர்வு, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி போன்ற முடிவுகளை, வாபஸ் பெறக் கோரி, திரிணமுல் தலைவர் மம்தா, மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளார். அவரது கெடு, போலியாக இருக்காது என்ற, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக