அதேவேளையில் இடைத்தேர்தல் முடிவு அ.இ.அ.தி.மு.கவுக்கு புகட்டிய பாடம் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்காக 32 அமைச்சர்கள், 10 மேயர்கள், 100-க்கும் மேற்பட்ட நகராட்சி மன்றத் தலைவர்கள் என்று ஆளுங்கட்சி பரிவாரமே முகாமிட்டனர். முதல்வர் ஜெயலலிதா நேரில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்தார்.
இந்தச் சுனாமியை எதிர்த்து தேமுதிகவினர் 30,500 (21.3 சதவீதம்) வாக்குகள் பெற்று ஆளும் கட்சியினருக்குச் சரியான பாடம் புகட்டியுள்ளனர். புதுக்கோட்டை வாக்காளர்கள் தேமுதிகவுக்கு டெபாசிட்டை தந்ததோடு அதிக அளவிலும் வாக்குகளை அளித்துள்ளனர். தேமுதிகவுக்கு இனிமேல் இறங்கும் முகம்தான் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் பேசினார்.
ஆனால் மக்கள் தேமுதிகவுக்கு ஏறுமுகம்தான் என்பதையே பதிலாகத் தந்துள்ளனர் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக