வெள்ளி, ஜூன் 22, 2012

பிரான்ஸ் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞன்

பிரான்சில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று காலை ஒரு வங்கிக்குள் மர்ம நபர் புகுந்தான். அவனுக்கு 25 முதல் 35 வயது இருக்கும். பின்னர் அவன் துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களை மிரட்டினான்.பிறகு, கொள்ளையடிக்க முயன்றான். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு வந்து சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவன் அங்கு பணியில் இருந்த 4 ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்தான்.
 
அதைத்தொடர்ந்து தப்பி செல்ல முயன்ற அவனை 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு போலீசார் துப்பாக்கியால் சுட்டு உயிருடன் பிடித்தனர்.
 
மேலும் அவன் பிடியில் பிணை கைதிகளாக இருந்த 4 ஊழியர்களையும் மீட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக