வியாழன், ஜூன் 28, 2012

ராகிங் செய்தால் பாஸ்போர்ட் பெற முடியாது !


 கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
கோவை மாவட்டக் காவல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம்பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காவல்துறை கண்காணிப்பாளர் உமா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ” ராகிங் செய்வது மிகக் கடுமையான குற்றம், இந்தக் குற்றத்தினைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்” என்றும், அவர்கள் படிப்பினை தொடர முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ” ராகிங் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாது என்றும், பாஸ்போர்ட் பெற முடியாது” என்றும் தெரிவித்தார். ராகிங் சம்பந்தமாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம் என அவர் தெரிவித்தார். 

ராகிங் செய்வதை கல்லூரிகள் மறைத்தால் கல்லூரிக்கு பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் அதிகாரி உமா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக