வெள்ளி, ஜூன் 22, 2012

இடதுசாரிகள் கூட்டணியிலும் கருத்து வேறுபாடு! – பிரணாபை ஆதரிக்க சிபிஎம்மும், தேர்தலை புறக்கணிக்க சிபிஐயும் முடிவு !

Left parties divided; CPM to back Pranab, CPI to abstainபுதுடெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதில்,பா.ஜனதா  கூட்டணியை தொடர்ந்து இடதுசாரி கூட்டணியிலும்  கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளப்
போவதில்லை என்று தீர்மானித்துள்ளன.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதில் தேசிய ஜனநாயக  கூட்டணிக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜனதா, சங்மாவை ஆதரிக்கப் போவதாக  அறிவித்துள்ள போதிலும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள்  பிரணாப்புக்கே தங்களது ஆதரவு என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக