வியாழன், ஜூன் 28, 2012

எனது மகன் தீவிரவாதி அல்ல: அபூ ஜிண்டாலின் தாயார் பேட்டி !

abu jandalபுதுடெல்லி:’எனது மகன் தீவிரவாதி இல்லை’ என்று மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அபூ ஜிண்டாலின் தாயார் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அபூ ஜிண்டாலின் தாயார் ரிஹானா பேகம் கூறியது: ‘எனது மகன் தீவிரவாதி அல்ல. பாதுகாப்பு ஏஜன்சிகள் அவன் மீது பொய்வழக்கை சுமத்தியுள்ளனர். ஜிண்டாலை டி.என்.ஏ சோதனை உட்படுத்தவில்லை. எவ்வித டி.என்.ஏ
பரிசோதனையும் அவனுக்கு நடத்தவில்லை. எனது மகனை சிக்கவைத்துள்ளார்கள். அவன் இறைபக்தி உள்ளவன். இதுபோன்ற செயல்களை அவனால் செய்ய இயலாது.’ இவ்வாறு தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ஆம் தேதி மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கூறி டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவு டெல்லி விமானநிலையத்தில் வைத்து ஜிண்டாலை கைது செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக