புதன், ஜூன் 27, 2012

மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட் !

கோலாலம்பூர்:மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய
"டிவி' நிர்வாகம் மறுத்து விட்டது.

நாங்கள் என்ன வழுக்கை தலை நபரையா பணிக்கு வைத்துள்ளோம். பழையபடி முடி வளர்ந்த பிறகு தான் ராஸ் அடிபா பணிக்கு வர வேண்டும். விக் வைத்து கொண்டால் செயற்கையாக தெரியும், எனவே, தற்போதைக்கு அவர் பணி செய்ய அனுமதியில்லை' என,"டிவி' நிர்வாகம் கூறிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக