
நான் எனது கருத்தைத் தெரிவித்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகள்தான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்’ என்றார் மோகன் பகவத்.
பிரணாப் முகர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டணிக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து முடிவு அறிவிப்பதை பாஜக கூட்டணி தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து அப்துல் கலாமுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கலாமுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலாம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சங்க்பரிவார்களின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அப்துல் கலாமை ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கம் ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக