திங்கள், ஆகஸ்ட் 04, 2014

காஸாவில் பலியான குழந்தைகளின் பிரேதங்களை ஐஸ்கிரீம் ப்ரீஸரில் பாதுகாக்கும் அவலம்










காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களினால் பலியான பிஞ்சு குழந்தைகளின் பிரேதங்கள் அழுகாமல் இருக்க, போதுமான குளிர்சாதனப் பெட்டி வசதி இல்லாததால் அக்குழந்தைகளின் பிரேதங்களை ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் விமானப் படைகளின் தாக்குதல்களால் காஸாவில் ரஃபா நகரில் உள்ள நஜ்ஜார் மருத்துவமனை தரைமட்டமாகியுள்ளது. இதனிடையே, தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வழியின்றி தவிக்கும் மக்கள், குழந்தைகளின் உடல்கள் அழுகாமல் இருப்பதைத் தடுக்க பெரும் பாடுப்பட்டு வரும் நிலை அங்கிருக்கும் மனித ஆர்வலர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக