புதன், மார்ச் 26, 2014

நடுவானில் தீப்பிடித்த மலிந்தோ ஏர் விமானம் : பயணிகள் காயமின்றி தப்பினர்

மலேசிய விமான நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் ஒன்று நடுவானில் இன்று தீப்பிடித்ததையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. 

மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக திருப்பினார். பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 

என்ஜின் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 18 நாட்களாகியும் அதன் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று மற்றொரு விமானம் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக