வெள்ளி, மார்ச் 28, 2014

ஹேல்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி இமாலய வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தில்சான் மற்றும் ஜே. பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.  தில்சான் (55), பெரேரா (3) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்பு ஜெயவர்த்தனே அதிரடியாக ஆடி (89) ரன்கள் சேர்த்து ஆடடமிழந்தார்.  சங்கக்கரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  சி. பெரேரா (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியின் வீரர்களான லம்ப் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  அலி (0), மோர்கன் (57) மற்றும் பட்லர் (2) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  ஹேல்ஸ் (116) மற்றும் போபரா (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக