செவ்வாய், மார்ச் 25, 2014

அமெரிக்க நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டி நகருக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஓசோ என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன்பு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 49 வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணில் புதைந்து சேதம் அடைந்தன. இந்த பகுதியில் தீயணைப்பு படையினரும், ராணுவ வீரர்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு 8 பேர் உடல்களை எடுத்தனர்.  இந்த நிலையில், இன்று மேலும் 6 உடல்கள் கிடைத்தன. இதனால் நிலச்சரிவு சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
அப்பகுதிகளில் வசித்த மேலும் 176 பேரை காணவில்லை. இவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீட்புபணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜனாதிபதி ஒபாமா மீட்பு நடவடிக்கையை முழுவீச்சில் நடத்த உத்தரவு பிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக