ஞாயிறு, மார்ச் 30, 2014

ஆந்திராவில் பா.ஜனதா–தெலுங்குதேசம் கூட்டணி முறிந்தது

பாராளுமன்ற தேர்தல் அறிவித்த உடனேயே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா முடிவு செய்தது. இதையடுத்து பா.ஜனதா மாநில விவகார பொறுப்பாளர் பிரகாஷ் ஐவதேகர் ஆந்திரா வந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் பா.ஜனதாவுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்க தெலுங்கு தேசம் முடிவு செய்தது. இதை பா.ஜனதா ஏற்கவில்லை. இதனால் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாமல் பிரகாஷ் ஐவதேகர் டெல்லி சென்றார்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் ஜவதேகர் மீண்டும் ஆந்திரா வந்தார். தெலுங்கு தேசம் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை.

நேற்று இரவு வரை பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா உறவு முறிந்தது. அங்கு தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா பகுதி பா.ஜனதா தலைவர் கிஷண் ரெட்டி கூறியதாவது:–
தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமையவில்லை. அவர்கள் தொகுதி ஒதுக்குவது மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உள்ளது. தெலுங்கானா பகுதியில் பா.ஜனதா 119 சட்டசபை தொகுதியில் 17 பாராளுமன்ற தொகுதியிலும் பா.ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாளை உகாதியன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்.
தெலுங்கு தேசம் கட்சியால் ஆந்திராவில் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. தனித்து நின்றால் தெலுங்கு தேசம் கட்சி போணியாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சீமாந்திரா பகுதி பா.ஜனதா தலைவர் அரிபாபு கூறுகையில், ‘‘சீமாந்திரா பகுதியில் பா.ஜனதா 25 பாராளும்னற தொகுதியிலும், 175 சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக