ஞாயிறு, மார்ச் 30, 2014

மோடி, எடியூரப்பா, அத்வானி பா.ஜ.கவில் இருக்கலாம், நான் இருக்கக் கூடாதா?-பிரமோத் முத்தலிக் ஆவேசம்!

தீவிரவாத இந்துத்துவா அமைப்பான ஸ்ரீராம சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக், அண்மையில் பா.ஜ.கவில் இணைந்த ஐந்தே மணிநேரத்தில் நீக்கப்பட்டார். இதுக்குறித்து தி இந்து பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதாக நரேந்திரமோடி மீது வழக்கு இருக்கிறது. பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எடியூரப்பா மீது வழக்கு இருக்கிறது. பாபர் மஸ்ஜிதை இடித்ததாக அத்வானி மீது கூட வழக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் பா.ஜ.கவில் இருக்கலாம் நான் இருக்கக் கூடாதா? இவ்வாறு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக