ஞாயிறு, மார்ச் 30, 2014

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் ஷேவாக் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–
எனது கடந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. நான் போதிய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கும் 7–வது ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த முறை புதிய அணியில் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) புதிய வீரர்களுடன் இணைகிறேன். புதிய அணி என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை என்னால் சொல்ல முடியாது. ரன் குவிப்பதே எனது பணியாகும். அணியில் நான் இடம்பெறுவேனா? இல்லையா? என்பதை தேர்வாளர்கள் தான் முடிவு செய்ய முடியும். இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கலாம். எனது ஆட்டத்தை பொறுத்தே இது அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். ஷேவாக் கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக