ஞாயிறு, மார்ச் 30, 2014

வேட்பு மனுவை வாபஸ் பெறமாட்டேன்: ஜஸ்வந்த் சிங்!

"பார்மர் தொகுதியில் இருந்து வேட்பு மனுவைத் திரும்பப் பெறப்போவதில்லை'' என்று பாஜக அதிருப்தி தலைவர் ஜஸ்வந்த் சிங் திட்டவட்டமாகக் கூறினார்.


ஜஸ்வந்த் சிங்குடன் பாஜக மூத்த தலைவர் ஒருவர் தொடர்பு கொண்டு, அவரை சமாதானப்படுத்தி வேட்பு மனுவைத் திரும்பப்பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது, "பார்மர் தொகுதியில் இருந்து வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பாஜக தலைவர்கள் யாரும் என்னுடன் பேசவில்லை'' என்று அவர் பதிலளித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ஜஸ்வந்த் சிங், மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊர் அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக மேலிடம் அனுமதி மறுத்துவிட்டது.
அவருக்குப் பதிலாக காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த சோனாராம் சௌத்ரிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த ஜஸ்வந்த் சிங், அதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக