புதன், நவம்பர் 28, 2012

யாசர் அராஃபத் உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு...

பாலத்தீனத் தலைவர் யாசர் அராஃபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பதை கண்டறியும் முகமாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு அவரது உடல் ரமல்லாவில் உள்ள கல்லறையில் மீண்டும் புதைக்கப்பட்டது. அராப்ஃத்தின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை இப்போது வல்லுநர்கள்
ஆய்வு செய்வார்கள் என்றாலும், அதன் முடிவுகள் தெரிய பல மாதங்களாகலாம்.
அவரக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத சூழலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாசர் அராஃபத் காலமானார். கதிரியக்கத் தாதுப்பொருளான பொலோனியம் அவரது உடைகளில் இருந்தது என்று தொலைக்காட்சி அவணப்படம் ஒன்றில் செய்தி வெளியனதை அடுத்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அவரது மரணத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருந்தது என்று பல பாலத்தீனியர்கள், அராஃபத்தின் மனைவி வேண்டிக் கொண்டதை அடுத்து அவரது மரணம் குறித்த ஒரு விசாரணை பிரான்ஸில் தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக