புதன், நவம்பர் 28, 2012

கருணாநிதி ஒரு கைநாட்டு: சு.சாமி குசும்பு !

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதி ஒரு சினிமாக்காரர், படிக்காதவர் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் அரசுக்கு ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்துவது குறித்து திமுக தலைவர் டிஆர் பாலு நோட்டீஸ் கொடுத்தார். அதில், 2ஜி ஊழல் வழக்கில் சிஏஜியின் அறிக்கை கால
தாமதமானதை அது எவ்வாறு ஆடிட் செய்துள்ளது என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிஏஜி அமைப்பை பல நபர் கொண்டதாக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார். மேலும் அண்மையில் நடத்தப்பட்ட 2ஜி ஏலத்தில் அரசுக்கு வெறும் ரூ.9,000 கோடி கிடைத்துள்ளது 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறும் சிஏஜி அறிக்கை தவறானது என்பதையே காண்பிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், 2ஜி குறித்து திமுக விவாதித்தால் அவர்கள் அனைவரும் முன்பு கழுதைகளாகிவிடுவார்கள். ஏனென்றால் திமுகவினர் எல்லாம் சினிமாக்காரர்கள், அதிலும் கருணாநிதி படிப்பறிவில்லாதவர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக