வெள்ளி, நவம்பர் 23, 2012

தங்க பாதணியை பலஸ்தீன் சிறுவர்களுக்காக அன்பளிப்புச் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ !

உலக உதைப்பந்தாட்ட சிறந்த வீரர்களுள் ஒருவரான போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திரமும், ரியல் மெட்ரிட் அணியின் அதிரடி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனக்கு 2011 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கான தங்க பாதணியை பலஸ்தீன் சிறுவர்களுக்கான அன்பளிப்புச் செய்திருக்கிறார். 1.5 மில்லியன்
யூரோ பெறுமதியான இந்த தங்கச் பாதணியை  தான் மனமுவந்து பலஸ்தீன் குழந்தைகளுக்கு வழங்குவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
உலகம் முழுவதும் பல மில்லியன் இரசிகர்களைக் கொண்டிருக்கும் ரொனால்டோவின் இச் செயற்பாடு நிச்சயமாக உலகத்தை காஸா பக்கம் திரும்பச் செய்திருக்கின்றது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக