சனி, ஜூலை 05, 2014

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஏழை குடும்பங்களுக்கு ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

மணிப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஏழை குடும்பங்களுக்கு ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, வட்டியில்லா சிறு தொழில் கடனுதவி, குடிநீர் விநியோக திட்டம், இலவச சுய தொழில் பயிற்சி வகுப்புகள், நிவாரண உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மணிப்பூர் மாநிலம் சார்பாக மாநில தலைமையகத்தில் வைத்து 4.7.2014 அன்று ஏழை குடும்பங்களுக்கு ரமலான் காலகட்டத்தில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கும் நிக்ழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு நோன்பு வைப்பதற்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக