ஞாயிறு, ஜூலை 06, 2014

திகார் சிறையில் முஸ்லிம்களுடன் ரமலான் நோன்பிருக்கும் 150 இந்து கைதிகள்

டெல்லி திகார் சிறைக்குள் ரமலான் நோன்பை கடைபிடிக்கும் சுமார் 2300 முஸ்லிம் கைதிகளுடன் 150 இந்திய கைதிகளும் நோன்பிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 
ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாலில் இருந்தே அங்கிருக்கும் முஸ்லிம் கைதிகளுடன் நோன்பிருந்துவரும் இந்த 150 இந்து கைதிகளும் 30 நோன்புகளையும் தொடர்ந்து கடைபிடிப்போம் என்று உறுதி பூண்டு, மத நல்லிணக்கத்துக்கு புத்தகராதியாக மாறியுள்ளனர். 

இந்த நோன்பாளிகள் அனைவரும் அதிகாலை ‘சஹர்’ செய்யவும், மாலையில் நோன்பை நிறைவு செய்யும் ‘இப்தார்’ நிகழ்ச்சிக்கும், ஐவேளை தொழுகை நடத்தவும் சிறைத் துறை அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடு செய்து தந்துள்ளனர். 

70 பெண் கைதிகள் உட்பட இந்த 2450 நோன்பாளிகளுக்கும் பல்வேறு வகையான பழங்கள், ’ஜிலேபி’ உள்ளிட்ட இனிப்பு வகைகள் மற்றும் பலகாரங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக