ஞாயிறு, ஜூலை 06, 2014

உலகக் கிண்ணம்: முதுகெலும்பில் காயம், போட்டியிலிருந்து வெளியேறுகிறார் நெய்மார்

அதிகாலை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் கொலும்பியாவுடன் மோதிய பிரசில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும், உலகக் கிண்ண போட்டிக்குத் தலைமையேற்றுள்ள பிரசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார் முதுகெலும்பில் காயமடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது, அந்த அணிக்குக் கிடைத்த பேரிடியாகக் வர்ணிக்கப்படுகிறது.

நெய்மார், முதுகெலும்பின் ஒரு பகுதியில் (vertebra) விரிசல் ஏற்பட்டுள்ளதால் அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியுடன் களமிறங்க இயலாது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலிறுதிச் சுற்றில் கொலும்பியாவுடன் களமிறங்கிய பிரசில் ஒரு 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. எனினும், இம்முறை பிரசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் நெய்மார் காயமடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது, பிரசில் அணி விளையாட்டளர்கள், மற்றும் ஆதரவாளர்களிடையேயும் ஒரு தோய்வை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக