வியாழன், ஜூலை 24, 2014

பல முக்கிய நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாக உள்ளது

எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ள போதிலும் நெடுஞ்சாலைகளில் சாலை போக்குவரத்து சுமூகமாகவே உள்ளது. 

காலை 10 மணி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் சுபாங்கிலிருந்து டத்தாரான் பிரிமா செல்லும் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
இந்த சாலை நெரிசல் வழக்கமாகவே காணப்பட்டாலும், நாளை மேலும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்பதால், நாளை போக்குவரத்து நெரிசல் கடுமையாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக