வியாழன், ஜூலை 10, 2014

சீனாவில் கனமழை: நிலச்சரிவில் 17 பேர் மாயம்

சீனாவின் யுனான் மாகாணத்தில் புகாங் மாவட்டம் ஷவா கிராமத்தில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதன்காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நுஜியாங் ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிக்கினர். 

தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கிய ஒருவரை மீட்டனர். மேலும் 17 பேரை காணவில்லை. இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிலர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. மாயமானவர்களை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக