புதன், நவம்பர் 14, 2012

மஜ்லிஸ் கட்சி ஆதரவு வாபஸ் ஆந்திரா அரசுக்கு திடீர் சிக்கல்...

ஐதராபாத் : கூட்டணி கட்சியான மஜ்லிஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவாசி ஐதராபாத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,''கோயில் விவகாரத்தில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. எனவே, மத்தியில் உள்ள ஐ.மு கூட்டணி அரசுக்கும், ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கும் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்'' என்றார். மஜ்லிஸ் கட்சிக்கு ஒரு மக்களவை எம்.பி.யும், ஆந்திராவில் 7 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். ஆதரவு வாபஸ்முடிவால்,ஆந்திராவில் கிரண்குமார் ரெட்டி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக