ஞாயிறு, நவம்பர் 18, 2012

காஸ்ஸா தான் எனக்கு முக்கிய விஷயம்! – எர்துகான் !

அங்காரா:காஸ்ஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் புதிய முடிவுகளை எடுக்க காரணமாகும் என்று துருக்கி பிரதமர் எர்துகான் தெரிவித்துள்ளார். பிரபல அரபுலக சிந்தனையாளர் ஃபஹ்மி ஹுவைதிக்கு அளித்த நேர்முகத்தில் அவர் இதனை தெரிவித்தார். காஸ்ஸா மீது நடக்கும் தாக்குதலை கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்க துருக்கி தயாரில்லை. விரைவில் கெய்ரோ செல்ல உள்ளேன்.
எகிப்துடன் சேர்ந்து ஆலோசித்து இஸ்ரேலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று எர்துகான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக