திங்கள், நவம்பர் 26, 2012

திமுக முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் காலமானார் !

சென்னை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் (வயது 66) சென்னையில் நேற்று காலமானார். தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சமயநல்லூர் செல்வராஜ், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சென்னையில் உள்ள தமது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று
வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து சில நாட்களிலேயே சமயநல்லூர் செல்வராஜும் மறைந்திருப்பது தமக்கு பெரும் கவலையளிப்பதாக கருணாநிதி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக