வெள்ளி, நவம்பர் 30, 2012

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நாவில் வாக்கெடுப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக ஐ.நாவில் வாக்கெடுப்பு நடந்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத்தின் முயற்சியால் பாலஸ்தீனம் தனி நாடானது. இருப்பினும் இந் நாடு ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இராணுவம் அமைப்பது, ஆயுதங்களை வாங்குவது,
எல்லைகளை வரையறுப்பது போன்ற காரியங்களை பாலஸ்தீனத்தால் செய்ய முடியவில்லை.

எனவே தான் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா சபையில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது.
அமெரிக்கா, ஜேர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன.
ஐ.நா சபையில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், 126 நாடுகள் அதன் இறையாண்மையை அங்கீகரித்து உள்ளன.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.


1 கருத்து: