சனி, நவம்பர் 17, 2012

இஸ்ரேலின் காஸா மீதான வெறிச்செயல்கள் : BBC ஊடகவியலாளரின் 11 மாதக் குழந்தை பலி !

காஸா பள்ளத்தாக்கின் மீது இஸ்ரேல் இன்று மேற்கொண்ட வான் தாக்குதல் ஒன்றில் பி.பி.சி.அரபு மொழிச் சேவையின் ஊடகவியலாளரான ஜிஹாத் அல் மஸராவியின் 11 மாத ஆண் குழந்தையான உமர்  உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பி.பி.சி.யின் அரபு மொழிச் சேவையின் புகைப்பட ஆசிரியரான மஸராவி தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை மேற்கொண்ட குறித்த வான்
தாக்குதலில்   அவரது சகோதரர்    படுகாயமடைந்துள்ளதோடு அவரது  மனைவி கொல்லப்பட்டுள்ளார்.குறித்த ஊடகவியலாளரின் வீடு விமானத்தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து காயமடைந்த  மஸராவியின் குழந்தை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அது பயனளிக்கவில்லை.
இந்  நிலையில் இஸ்ரேல் காஸாவின் பொதுமக்கள் உள்ள பிரதேசங்கள் மீது தொடர்ந்தும் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக