வெள்ளி, நவம்பர் 16, 2012

ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம். சர்ச்சையை கிளப்பிய சாமியாரின் பேட்டி !

ராமரை மோசமான கணவர் என்று கூறிய ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கூறியுள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்தவர் ராம் ஜெத்மலானி. பிரபல வழக்கறிஞரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ராமர் பற்றி குறிப்பிடுகையில், மீனவர்கள் சிலர் பேச்சைக் கேட்டு தன் மனைவி சீதையை தீக்குளிக்கச் சொன்ன ராமர், மிகவும் மோசமான
கணவர் என்று குறிப்பிட்டிருந்தார். ராம் ஜெத்மலானியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ம.பி., மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த மகாமண்டலேஸ்வர் சுவாமி ஷ்யாம் தாஸ் மகரான் என்ற சாமியார் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராமரைப்பற்றி தவறாக கூறிய ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ராம் ஜெத்மலானியின் கருத்தால் வெகுண்ட தனது சீடர்கள், இது தொடர்பாக தம்மை போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவரை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதையடுத்து இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சாமியாரின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது சீடர்களும் இளைஞர்களும் ராம் ஜெத்மலானி குறித்து அறியவும், அவரது வீட்டு அட்ரசை கண்டுபிடிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே, தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள சாமியார், தனது பேச்சு மிரட்டல் விடுக்கும் தொனியில் சொல்லப்பட்டது அல்ல என்றும், வன்முறையற்ற எதிர்ப்பு செயல் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக