வெள்ளி, நவம்பர் 16, 2012

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர வான் தாக்குதல்- 11 பேர் பலி, 100 பேர் காயம். . .

காசா: பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இன்று இஸ்ரேலின் விமானப் படை நடத்திய உக்கிரமான தாக்குதலில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முதல் கடுமையான வான் தாக்குதலை நடத்தி வருகிறது. 60க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதியான அகமது ஜபாரி உயிரிழந்ததாக
அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் இன்றும் இஸ்ரேல் தொடர்ச்சியான வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
குழந்தைகள் பலி
இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹமாஸ் இயக்க அமைச்சர் முஃபித், இஸ்ரேலின் வான் தாக்குதலில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றனர் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக